Friday, July 16, 2010

எனக்காக

கண்ணா பின்னா என்று எழுதிய கவிதைகள்,
ஒன்று கூட புலப்படவில்லை,
எனக்கு என்று தேடும் போது!

Wednesday, July 7, 2010

ஈழம்

வந்தாரை வாழ வைத்தவன் தமிழன்,
பாவம்!இங்கே அவனே வாழ வழியின்றி கிடக்கிறான்!
முத்தம் தரும் உதடுகளோ,
கிழிந்து கிடக்கிறது!
அன்னை மடியோ,
வெடித்து கிடக்கிறது!
பிறக்கும் சிசுவுக்கும் அவசரம் தான்,
ஏனோ! பிறந்தவுடன் இறந்துவிடுகிறது!
இங்கே இருக்கைக்கு சண்டை,
அங்கே இருக்கவே சண்டை!
பொருள் பொதிந்த தமிழ் அகராதியிலும்,
தமிழனுக்குப் பொருள் 'அகதி'...

Friday, July 2, 2010

விருப்பங்களும்-திருப்பங்களும்

வாழ்க்கையில் விருப்பங்களும் திருப்பங்கள் நிறைந்தது தான்,
திருப்பங்கள் விருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீராய் போகும்...
விருப்பங்கள் திருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீருகெட்டுப் போகும்...